சனி, 25 ஜூன், 2016

மாமழை..


நீல வண்ணத்தில் துயர ரேகைகளாக தூவுகிறது காலத்தின் மழை விழி நீளும் புதிர்களின் தடங்களில் அந்த மாமழை... நுழைவாயிலற்ற சுவர்களாக குழம்பிய சித்திரங்களாக திகட்டும் சுவையொன்றாக அந்த கானல் மழை ஒரு சனிக்கிழமை புலர்ந்த வானம் சிவப்பாக மாறியிருந்தது அதன் கூரையிலிருந்து சில துளிகள் விழுந்து கொண்டிருந்தன நிலத்தில் போர்த்தியபடி கிடந்தது பழுப்புநிறம் நிலம் இருப்பதற்கான ஒற்றைசாட்சியாக வனம் பழுப்பை பூசியபடி வானத்தை நோக்கி தாவிக் கொண்டிருந்தது உயிர்களின் வாசனையற்ற அந்த உயரத்தில் ஒற்றை தடாகம் ஒற்றை தாமரை படிக்கரையில் அந்த சிறுவன் ஒளிரும் கண்கள் ஒற்றை சிரிப்பு நிலம் பிளந்து ஆசையும் ஆங்காரமும் ததும்ப உயரம் நோக்கி கிழிந்த சுவர்களின் கிளைகளை பிடித்தபடி மேலேறிக் கொண்டிருந்தார்கள் மனிதர்கள்.... கீழே அமர்ந்தபடி மேலே பார்த்தான் புத்தன் மேலிருந்தபடி கீழே பார்த்தான் சிறுவன் செஞ்சிவப்பாக மழை வலுத்தது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீயும் நானும் நாமாகும் பொழுது..