நெடுநேரம்
தூங்க எத்தனிக்கும்
உன் இதயத்தை இறுக பிடித்திருந்தேன்
மழை வரும் நனைய விடலாமென..
நேரம் கடந்து நாட்களாகி
இருண்மை அடர்ந்து வருடங்களின்
புற தோற்றங்களை முதுகில் சுமந்த படி
காத்திருந்தேன்
காத்திருந்தேன்
காத்திருந்தேன்
ஒரு நாள் மணலை குடைந்து
கடலலைகளை உடலாக முறுக்கியபடி...
உன் மேகத்திரலை கெக்களித்தபடி
உலகின் வண்ணங்களை ஒளித்துக் கொண்டு
கம்பீரமாக நின்றது வானவில்
இறுக்கி பிடித்திருந்த
கை நரம்புகள் புடைத்து வெடித்திட
என்னை விட்டகன்றாய் ..
என்றாவது ஒரு நாள் நீ
பிடித்திருக்கும் வானவில்லை
என் மழை மூழ்கடிக்கும்
அப்பொழுது நீயும் இங்கிருக்க மாட்டாய் ..
நானும் மழையை மறந்திருப்பேன்...........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
நீயும் நானும் நாமாகும் பொழுது..